ஜம்புதீவு பிரகடன தினத்தில், சுதந்திர போராட்ட வீரர்களான மருது சகோதரர்களுக்கு நாடு பணிவுடன் மரியாதை செலுத்துவோம் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள பதிவில், 1801 -ஆம் ஆண்டு இதே நாளில், ஸ்ரீரங்கத்தில் உள்ள ஸ்ரீ ரங்கநாதசுவாமி கோயிலில், ஒவ்வொரு பாரதியரும், பிராந்தியங்கள், மதங்கள் மற்றும் சமூகங்களுக்கு அப்பாற்பட்டு, பாரதம் மீதான அந்நிய ஆக்கிரமிப்புக்கு எதிராக ஒன்றுபட்டு சுதந்திரத்துக்காகப் போராட வேண்டும் என்று அவர்கள் தெளிவான அழைப்பை விடுத்தனர் என தெரிவித்துள்ளார்.
இந்த மூலோபாய அழைப்பு சுதந்திரத்துக்கான ஒருங்கிணைந்த ராணுவப் போராட்டத்துக்கு வழிவகுத்தது. இந்த முக்கிய பிரகடனம் உத்வேகத்தின் கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்து, நீதி மற்றும் தர்மத்தின் நித்திய மதிப்புகளில் வேரூன்றிய ஒரு வலுவான, இறையாண்மை கொண்ட பாரதத்தை உருவாக்க நம்மை வழிநடத்துகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
உறுதியான நம்பிக்கையுடனும் புதுப்பிக்கப்பட்ட நோக்கத்துடனும், நமது தனிப்பட்ட மற்றும் கூட்டு மனநிலையிலிருந்து காலனித்துவ செல்வாக்கின் ஒவ்வொரு தடயத்தையும் நீக்கி, நம்பிக்கையான, இரக்கமுள்ள மற்றும் முழுமையாகத் திறன் கொண்ட வளர்ச்சியடைந்த பாரதம் 2047 -ஐ நோக்கி நமது தேசத்தை முன்னோக்கி நகர்த்துவோம் என்று உறுதியளிப்போம் என தெரிவித்துள்ளார்.