திருப்பூரில் அரசு மருத்துவமனைக்குக் காலில் காயத்துடன் வந்த நோயாளிக்கு தூய்மை பணியாளர் சிகிச்சை அளித்த வீடியோ வெளியாகி உள்ளது.
மடத்துக்குளம் அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இல்லாத நிலை நீடித்து வருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு காலில் காயத்துடன் இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக நோயாளி ஒருவர் வந்த நிலையில் பெண் தூய்மை பணியாளர் காயத்தைச் சுத்தம் செய்து கட்டு போட்டுள்ளார்.
இதுகுறித்து வீடியோ வெளியான நிலையில், இரவு 11 மணி அளவில் நோயாளி வந்ததால் கட்டை பிரிக்க மட்டுமே தூய்மை பணியாளர் பயன்படுத்தப் பட்டதாக மருத்துவத் துறை இணை இயக்குனர் மீரா தெரிவித்துள்ளார்.