வேலூர் அருகே விலைபோகாத மாங்காய்களை சாலையில் கொட்டி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டை விட நடப்பாண்டு மாங்காய் விளைச்சல் அதிகரித்துள்ளது. வேலூர் மாவட்டத்தில் பழச்சாறு தொழிற்சாலை இல்லாததால் அருகே உள்ள ஆந்திர மாநிலத்திற்கு மாங்காய்களை எடுத்து சென்றனர்.
ஆந்திர மாநிலத்திலும் நடப்பாண்டு மாங்காய் விளைச்சல் அதிகரித்துள்ளதால், தமிழகத்தில் இருந்து எடுத்து சென்ற மாங்காய்களை ஆந்திர விவசாயிகள் திருப்பி அனுப்பியுள்ளனர். இதனால், மனவேதனை அடைந்த விவசாயிகள், வேலூர் அருகே உள்ள பரதராமி கெங்கையம்மன் கோயில் பகுதி சாலையில் மாங்காய்களை கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்றவில்லை என்றும், வேலூர் மாவட்டத்தில் பழச்சாறு தொழிற்சாலை கட்டிக் தரவேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். விவசாயிகளின் போராட்டத்தால் குடியாத்தம் – சித்தூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.