கள்ளக்குறிச்சியில் காவல்துறையினரின் தடையை மீறி VHP சார்பில் வேல் யாத்திரை மற்றும் வேல் பூஜை நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் பகுதியில் வரும் ஞாயிற்றுக் கிழமை முருக பக்தர்கள் மாநாடு நடைபெறவுள்ளது. அதனையொட்டி விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு சார்பில் வேல் யாத்திரை நடத்த திட்டமிடப்பட்டது.
ஆனால் வேல் யாத்திரைக்கு காவல்துறை அனுமதி மறுத்திருந்த நிலையில், மேல்மங்களம் குமரகுரு தேசிக சுவாமிகள் காவல்துறையின் செயல்பாடுகளுக்கு கண்டனம் தெரிவித்தார்.
இந்நிலையில், காவல்துறையின் தடையை மீறி திட்டமிட்டபடி VHP அமைப்பினர் வேல் யாத்திரையை நடத்தினர். தொடர்ந்து வேல் பூஜையும் விமர்சையாக நடைபெற்ற நிலையில், இந்து அமைப்பினர், பொதுமக்கள் என பலர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.