தஞ்சாவூரில் விவசாயிகள் கைது செய்யப்பட்டதற்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், விவசாயிகளை வலுக்கட்டாயமாக கைது செய்த திமுக அரசின் அராஜகப் போக்கு கண்டிக்கத்தக்கது என்று கூறியுள்ளார்.
கரும்பு கொள்முதலுக்கான நிலுவைத் தொகையை வழங்கக்கோரி முதலமைச்சருக்கு கறுப்பு கொடி காட்டிய விவசாயிகள் கைது செய்யப்பட்டதை சுட்டிக்காட்டியுள்ள அவர்,
நீதி கேட்டு ஒன்றரை ஆண்டாக விவசாயிகள் போராடி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
டெல்டாக்காரர் என பெருமை பேசும் முதலமைச்சர், அவ்வழியே செல்லும்போது விவசாயிகளின் குறைகளைக் கேட்டிருக்கலாம் என்று அறிவுறுத்தியுள்ள நயினார் நாகேந்திரன், ஏவல்துறையை ஏவி விவசாயிகளை குண்டுக்கட்டாகக் கைது செய்திருப்பது அடக்குமுறையின் உச்சம் என்று பதிவிட்டுள்ளார்.