நடிகர் சல்மான்கான், தான் திருமணம் செய்து கொள்ளாததற்கான காரணம் குறித்து மனம் திறந்துள்ளார்.
இதுகுறித்து நிகழ்ச்சியொன்றில் பேசிய சல்மான்கான், தனக்குள்ள விவாகரத்து பயம் திருமணத்திற்கு ஒரு தடையாக இருப்பதாக பேசினார்.
இதனால் 59 வயதிலும் தனிமையில் இருக்க முடிவு செய்ததாக அவர் தெரிவித்தார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான சிக்கந்தர் திரைப்படம் தோல்வியடைந்த நிலையில், தற்போது ராணுவ அதிகாரியாக ஒரு படத்தில் சல்மான்கான் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.