TNPSC குரூப்-1 தேர்வில் இந்தி எதிர்ப்பு தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், குரூப்-1 தேர்வில் இந்தி எதிர்ப்பில் தமிழர் எனும் அடையாளம் கொண்டு மக்களை திமுக ஒன்றிணைத்ததா? இல்லையா? என்ற ரீதியில் கேள்வி கேட்கப்பட்டதை சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பாக கடும் கண்டனம் தெரிவித்துள்ள நயினார் நாகேந்திரன், தேர்வர்களின் அறிவை சோதிக்க ஆளுங்கட்சியை போற்றும் விதமாக கேள்வியை வடிவமைப்பது சரியா என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், உயர் பதவியில் இருப்போர் ஆளும் அரசுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என இந்த கேள்வி சேர்க்கப்பட்டதா என கேள்வி எழுப்பியுள்ள அவர்,
வினாத்தாள்களில் சுய விளம்பர கேள்விகளை இடம்பெறச் செய்வதில் திமுக அரசு கவனம் செலுத்துவது முறையானதல்ல என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.