அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்த குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெற்றது.
கடந்த வாரம் அகமதாபாத்தில் நடைபெற்ற ஏர் இந்தியா விமான விபத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உட்பட 274 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் உடல்களை டிஎன்ஏ சோதனைகள் மூலம் அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி விஜய் ரூபானியின் உடல் டிஎன்ஏ சோதனை மூலம் சனிக்கிழமை அடையாளம் காணப்பட்டது.
இந்நிலையில் அவரது உடல் உள்ள சவப்பெட்டியின் மீது மூவர்ணக்கொடி போர்த்தப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து விஜய் ரூபானியின் உடல் அங்கிருந்து அவருடைய சொந்த ஊரான ராஜ்கோட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது.
அங்கு விஜய் ரூபானியின் உடலுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். பின்னர் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெற்றது.