நாட்டின் எரிபொருள் விநியோக தேவையை பூர்த்தி செய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக மத்திய அமைச்சர் ஹர்தீப் பூரி தெரிவித்துள்ளார்.
ஈரான்-இஸ்ரேல் இடையே தாக்குதல் தீவிரமடைந்துள்ள நிலையில், உலகளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது. இந்தியாவில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில், டெல்லியில் பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் பூரி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய அவர், கச்சா எண்ணெய் விலையில் நிச்சயமற்ற தன்மை இருந்த போதிலும், எரிபொருள் தேவைகளைப் பூர்த்தி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக தெரிவித்தார்.
கச்சா எண்ணெய் இறக்குமதியை கணிசமாக அதிகரித்துள்ளதாகவும், அந்தமான் பகுதியில் எரிசக்தி உற்பத்தியை அதிகரிக்க முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.