கிருஷ்ணகிரி மாவட்டம் தட்டரஹள்ளி சந்திப்பு சாலையில் தனிநபருக்கான சொந்தமான இடத்தில் திமுகவினர் அமைத்த பேருந்து நிழற்கூடம் நீதிமன்ற உத்தரவால் இடிக்கப்பட்டது.
சண்முகம் என்பவரது பட்டா நிலத்தில், திமுக பிரமுகர்களான மணிமேகலை நாகராஜ், ரமேஷ் ஆகியோர் அத்துமீறி பேருந்து நிழற்குடை அமைத்தனர்.
இதை எதிர்த்துப் பாதிக்கப்பட்ட விவசாயி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து கடந்த 2 ஆண்டுகளாகப் போராடி வந்தார். இந்த வழக்கில், நில உரிமையாளருக்கு இழப்பீடு வழங்கவும், பேருந்து நிழற்கூடத்தை அகற்றவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.