சிறுவன் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஏடிஜிபி ஜெயராம் சஸ்பெண்ட் - தமிழக அரசு உத்தரவு!
Aug 3, 2025, 05:20 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிறுவன் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஏடிஜிபி ஜெயராம் சஸ்பெண்ட் – தமிழக அரசு உத்தரவு!

Web Desk by Web Desk
Jun 17, 2025, 12:54 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிறுவன் கடத்தல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஏடிஜிபி ஜெயராம் சஸ்பெண்ட் செய்து தமிழக உள்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கத்தை சேர்ந்த இளைஞர், தேனியைச் சேர்ந்த பெண்ணை காதலித்து பதிவு திருமணம் செய்துள்ளார். பெண் வீட்டாருக்கு ஆதரவாக கூலிப்படையினர் மூலம் இளைஞரின் சகோதரரை புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், கே.வி.குப்பம் தொகுதி எம்.எல்.ஏவுமான ஜெகன்மூர்த்தி கடத்தியதாக புகார் எழுந்தது.

இதையடுத்து பூவை ஜெகன்மூர்த்தி உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் பெண்ணின் தந்தை உள்பட 5 பேர் கைதாகியுள்ளனர். இந்நிலையில், பூவை ஜெகன்மூர்த்தி முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நீதிபதி வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தபோது கடத்தலில் ஏடிஜிபி ஜெயராமுக்கு தொடர்புள்ளதாகவும் பணம் சம்பந்தப்பட்டுள்ளதாகவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் வாதிட்டார். இதையடுத்து பூவை ஜெகன்மூர்த்தி மற்றும் ஏடிஜிபி ஜெயராம் ஆகியோர் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

தொடர்ந்து இருவரும் நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில் ஏடிஜிபி ஜெயராமை கைது செய்து விசாரிக்கும்படியும், தேவைப்பட்டால் பூவை ஜெகன்மூர்த்தியை விசாரித்துக் கொள்ளலாம் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து ஏடிஜிபி ஜெயராமை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர்.

அவரிடத்தில் வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் 10 மணி நேரத்துக்கும் மேலாக விடிய விடிய விசாரணை நடத்தினார். இந்நிலையில் காவல்துறையின் பரிந்துரையின் பேரில் ஏடிஜிபி ஜெயராமனை சஸ்பெண்ட் செய்து தமிழக உள்துறை செயலாளர் உத்தரவிட்டார்.

இதனிடையே தனது கைது உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி ஏடிஜிபி ஜெயராம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்கு தொடர்ந்துள்ளார்.

 

Tags: Tamil Nadu Home SecretaryKalambakkamadgp jayaraman suspendchild arrest issuejeagan moorthymla jagan moorhy
ShareTweetSendShare
Previous Post

குத்தகை நிலத்தை அபகரித்த திமுக நிர்வாகி : ஆட்சியரகம் முன்பு தீக்குளிக்க முயன்ற மூவர்!

Next Post

‘பறந்து போ’ படத்தின் ‘டாடி ரொம்ப பாவம்’ பாடல் வெளியானது!

Related News

சுதந்திர போராட்ட வீரர்களை போற்றுவதிலும், பாராட்டுவதிலும் பாஜகவே முதன்மையான கட்சி – நயினார் நாகேந்திரன்

திருமங்கலத்தில் பூட்டிய வீட்டுக்குள் சடலமாக கிடந்த சிபிஎஸ்இ மண்டல அலுவலர் – போலீஸ் விசாரணை!

விபத்தில் சிக்குபவர்களுக்கு சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனைகள் அலட்சியம் காட்டுகின்றன – ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் குற்றச்சாட்டு!

செய்யாறு அருகே சந்தையை இடம் மாற்றம் செய்ய எதிர்ப்பு – வியாபாரிகள் சாலை மறியல்!

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் மீது புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை – பெற்றோர் வேதனை!

ஓபிஎஸ் விலகியது குறித்து தலைமை பதிலளிக்கும் – எல்.முருகன்

Load More

அண்மைச் செய்திகள்

கிட்னியை விற்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டதே திராவிட மாடல் அரசின் சாதனை – வானதி சீனிவாசன்

பிரதமர் மோடி பெயரை கூறுமாறு அதிகாரிகள் சித்ரவதை செய்தனர் – பிரக்யா சிங் தாக்கூர்

தூத்துக்குடியில் விரிவாக்கம் செய்யப்பட்ட விமான நிலையம் – விமான சேவை தொடங்கியது!

ஆணவ கொலை நடைபெறுவதற்கு திமுக அரசு வெட்கித் தலைகுனிய வேண்டும் – தமிழிசை

பவானி சாகர் அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் மாணவர் மாயம் – தேடும் பணி தீவிரம்!

சட்டமன்ற தேர்தலையொட்டி பொங்கல் பரிசு வழங்கும் திமுக அரசு – நயினார் நாகேந்திரன்

ஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் விவகாரம் – டிரம்ப்பின் கருத்துக்கு இந்தியா மறுப்பு!

ஆடிப்பெருக்கு கோலாகலம் – நீர்நிலைகளில் குவிந்த புதுமணத்தம்பதிகள்!

தீரன் சின்னமலை 220 – வது நினைவு தினம் – அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் மரியாதை!

கச்சா எண்ணெயின் விலை பீப்பாய்க்கு 200 டாலராக உயரலாம், ஏன் தெரியுமா?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies