CLAT தேர்வில் திருச்சி மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த மாணவிக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்துக் கூறி, பேனா பரிசளித்தார்.
மிளகு பாறை பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான தயாளன் என்பவரின் மகள் ராகினி, அரசினர் ஆதி திராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு முடித்தார்.
தொடர்ந்து, பொது சட்ட நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த மாணவி ராகினி, முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது மாணவியைப் பாராட்டிய முதலமைச்சர், அவருக்குப் பேனா ஒன்றை பரிசளித்தார்.