பஹல்காம் தாக்குதலுக்குப் பயங்கரவாத நிதி தடுப்புக்கான சர்வதேச கண்காணிப்புக் குழு கண்டனம் தெரிவித்துள்ளது.
பஹல்காம் தாக்குதல் குறித்த செய்திக்குறிப்பு ஒன்றை அந்த குழு வெளியிட்டுள்ளது. அதில், ஏப்ரல் 22-ம் தேதி நடந்த பஹல்காம் தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்துள்ளது.
இதுபோன்ற பயங்கரவாத தாக்குதல்களை நிதியுதவி இல்லாமல் செயல்படுத்த முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் மூன்று முறை மட்டுமே பயங்கரவாத நிதி தடுப்புக்கான சர்வதேச கண்காணிப்புக் குழு கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்த மாதம் நடைபெறவுள்ள எஃப்.ஏ.டி.எஃப். கூட்டத்தில் பாகிஸ்தானை கிரே பட்டியலில் சேர்க்க இந்தியா தீவிரம் காட்டி வருகிறது.