ஜமீன் பல்லாவரத்தில் தங்களுக்குச் சொந்தமான 40 சென்ட் நிலத்தைத் தனியார் அபகரிக்க முயல்வதாகத் தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் மனு அளித்துள்ளனர்.
சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் 75 வயதான பவுன் என்ற மூதாட்டி புகார் மனு அளித்துள்ளார். அதில், ஜமீன் பல்லாவரம் ரேடியல் சாலையில் 40 சென்ட் சொந்த நிலத்தில் குடிசை வீடு கட்சி வசித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தி சவுத் இந்தியன் அசெம்பிளி ஆஃப் காட் என்ற தனியார் நிறுவனம் போலி ஆவணம் தயாரித்து நிலத்தை அபகரிக்க முயல்வதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். கொலை மிரட்டல் விடுத்து நிலத்தை அபகரிக்க முயலும் தனியார் நிறுவனத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.