பெரம்பலூரில்nதனியார் நிதி நிறுவனத்தை இழுத்துப்பூட்டி ஊழியர்களைச் சிறை வைத்து வாடிக்கையாளர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவத்தால் பதற்றம் நிலவியது.
பெரம்பலூர் பாரத ஸ்டேட் வங்கி எதிரில் செயல்பட்டு வரும் தனியார் நிதி நிறுவனமான இண்டஸ்ண்ட் வங்கி கிளையில் ஆனந்தன் என்பவர் கடன் பெற்றுள்ளார்.
கடந்த10 ஆண்டுகளாக ஒரு காசோலை கூட ரிட்டன் ஆகாமல் முறையாகத் தவணைத் தொகையைச் செலுத்தி வந்த நிலையில், ஆயிரத்து 30 ரூபாய் காலாவதியான தொகை நிலுவையில் உள்ளதாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
மன உளைச்சலுக்கு ஆளான ஆனந்தன், வங்கியை இழுத்துப் பூட்டி ஊழியர்களை சிறைவைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த வங்கி ஊழியர்கள், தொழில்நுட்ப கோளாறு காரணமாக வந்துள்ள காலாவதி நிலுவைத் தொகை கணக்கைச் சரிசெய்கிறோம் என வாக்குறுதி அளித்தனர். பின்னர் வங்கி கதவைத் திறந்துவிட்டு ஆனந்த் ஊழியர்களை விடுவித்தார்.