குவாண்டம் தொழில்நுட்பத்தைக் கொண்ட பாதுகாப்பான தகவல் தொடர்பு சோதனையை டிஆா்டிஓ மற்றும் ஐஐடி இணைந்து வெற்றிகரமாக மேற்கொண்டது.
குவாண்டம் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் ஃப்ரீ-ஸ்பேஸ் கண்ணாடி இழைநாா் இணைப்பு மூலம், 1 கிலோமீட்டருக்கும் அதிகமான தொலைவில் பாதுகாப்பான தகவல் தொடர்பு சேவை பயன்பாட்டுக்காக இந்தச் சோதனை நடத்தப்பட்டது.
இந்தப் புதிய தொழில்நுட்பம் பாதுகாப்பான தகவல் தொடர்பு உள்ளிட்ட அம்சங்களில் இணையப் பாதுகாப்பு குறித்த பயன்பாடுகளுக்கு வழிவகுப்பதாகக் கூறப்பட்டுள்ளது.