தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் நகராட்சியில் விதிக்கப்பட்டுள்ள கூடுதல் வரி உயர்வைக் கண்டித்து வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்செந்தூர் நகராட்சியில் வீடு மற்றும் சொத்துவரி சுமார் 30 சதவீதம் கூடுதலாக விதிக்கப்பட்டுள்ளது. இதனைக் கண்டித்து திருச்செந்தூர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே, சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு அமைச்சர்கள் கே.என்.நேரு, அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் எம்பி கனிமொழி, சபாநாயகர் அப்பாவு ஆகியோர் ஆய்வுக்காகத் திருச்செந்தூர் வந்தனர்.
அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகளுடன் அமைச்சர்கள், எம்பி கனிமொழி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படாததால் வியாபாரிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.