முல்லைப் பெரியாறு அணையில் இருந்து நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால் தேனி – வீரபாண்டி முல்லைப்பெரியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை வலுத்து வருவதால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் 130 அடியைத் தாண்டி “கிடுகிடு” வென உயர்ந்து வருகிறது. இதையடுத்து முல்லைப்பெரியாறு அணையிலிருந்து தமிழகத்திற்கான நீர் திறப்பு விநாடிக்கு ஆயிரத்து 733 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதனால் தேனி மாவட்டம் உத்தமபாளையம், சீலையம்பட்டி, வீரபாண்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள முல்லைப் பெரியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் முல்லைப்பெரியாற்றைக் கடக்கவோ, குளிக்கவோ கூடாது என நீர்வளத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.