சென்னையில் பயன்பாட்டுக்கு வரவுள்ள ஓட்டுநர் இல்லாத முதல் மெட்ரோ ரயிலை ஆய்வு மேற்கொள்ள மத்திய ரயில்வே துறையின் RDSO நிபுணர் குழுவுக்கு மெட்ரோ ரயில் நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.
புதிய வழித்தடம் மற்றும் அதில் இயங்கும் மெட்ரோ ரயில்களை, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு முன்பு மத்திய ரயில்வே துறையின் தொழில்நுட்பக் குழுவிடம் அனுமதி பெறுவது அவசியம். அதன்படி, மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்டத்தில், பூந்தமல்லி – போரூர் இடையே சுமார் 9 கிலோ மீட்டருக்கு ஓட்டுநர் இல்லாத முதல் மெட்ரோ ரயில், மக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.
இந்நிலையில், மெட்ரோ ரயிலை ஆய்வு செய்யுமாறு மத்திய ரயில்வே துறையின் RDSO நிபுணர் குழுவுக்கு மெட்ரோ ரயில் நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது. ஜூலை மூன்றாம் வாரத்தில் நிபுணர் குழு ஆய்வுக்கு வருமாறு சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம், கடிதம் எழுதியுள்ளது.