குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை ராணுவ தலைமை தளபதி மற்றும் ஓய்வு பெற்ற ராணுவ தளபதிகள் சந்தித்து பேசினார்.
குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற சந்திப்பில், ராணுவ தலைமை தளபதி உபேந்திர திவேதி மற்றும் முன்னாள் ராணுவத் தளபதிகளான ஜெனரல் வி.பி. மாலிக், ஜெனரல் என்.சி. விஜ், ஜெனரல் ஜே.ஜே. சிங், ஜெனரல் தீபக் கபூர், ஜெனரல் பிக்ரம் சிங், ஜெனரல் மனோஜ் பாண்டே ஆகியோர் சந்தித்து பேசினர்.