ஈரானின் வான்வழித் தாக்குதலுக்குப் பிறகு வடக்கு இஸ்ரேலில் சிதறி கிடக்கும் பாலிஸ்டிக் ஏவுகணையின் பாகங்களை ராணுவ அதிகாரிகள் கைப்பற்றினர்.
இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ளதால் இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகின்றன. இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானில் 200க்கும் மேற்பட்டோரும், ஈரான் நடத்திய தாக்குதலில் இஸ்ரேலில் 10க்கும் மேற்பட்டோரும் உயிரிழந்துள்ளனர்.
இதனிடையே, வடக்கு மற்றும் மத்திய இஸ்ரேல் பகுதிகளில் ஈரான் நடத்திய பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதலில் 67 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈரான் – இஸ்ரேல் மோதலில் பாலிஸ்டிக் ஏவுகணை முதல் முறையாக பயன்படுத்தப்பட்டதாகவும், இஸ்ரேல் மீது ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை ஹைப்பர்சோனிக் ஏவுகணையை ஏவியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் மீது ஈரான் வீசிய ஏவுகணைகளில் சிலவற்றை இஸ்ரேலிய வான் பாதுகாப்பு அமைப்பு இடைமறித்து அழித்த நிலையில், இஸ்ரேலில் சிதறி கிடக்கும் பாலிஸ்டிக் ஏவுகணையின் பாகங்களை ராணுவ அதிகாரிகள் கைப்பற்றி ஆய்வுக்கு எடுத்து சென்றுள்ளனர்.