ஒரகடம் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்ற அதிமுக நிர்வாகியை ஆபாசமாக திட்டி, உதவி ஆய்வாளர் தாக்குதல் நடத்தும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் பனப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி ரவி என்பவர், ஒரகடம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க சென்றுள்ளார். காவல் ஆய்வாளரிடம் புகார் கொடுத்து விட்டு வெளியே வந்தபோது, என்னை சந்திக்காமல், காவல் ஆய்வாளரை ஏன் சந்தித்தீர்கள் என கேட்டு ரவியிடம் உதவி ஆய்வாளர் சிலம்பரன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
மேலும், ரவியை ஆபாச வார்த்தைகளால் திட்டி, தாக்குதல் நடத்தி உள்ளார். இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூர் டிஎஸ்பி-யிடம் ரவி புகார் அளித்த நிலையில், சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.