பறக்கும் விமானத்தில் பயணிகள் சிலர் சீட்டு விளையாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அகமதாபாத் விமான விபத்து நாட்டையே உலுக்கிய நிலையில், விமானங்களில் பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் சேவைகளை மேம்படுத்த பலதரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், நடுவானில் பறந்த விமானம் ஒன்றின் நடைபாதையில், பயணிகள் சிலர் துணியைக் கட்டி மேஜை போன்று அமைத்து சீட்டு விளையாடிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
இந்த வீடியோவை கண்டு அதிருப்தியடைந்த மக்கள் பலர், விமான நிறுவனங்களை குறை சொல்லும் மக்கள், தங்கள் பொது அறிவை பயன்படுத்தி சக பயணிகளுக்கு தொந்தரவளிக்காமல் நடந்து கொள்ள வேண்டும் எனபதிவிட்டுள்ளனர்.