மதுரையில் முருக பக்தர்கள் மாநாட்டையொட்டி அமைக்கப்பட்டுள்ள அறுபடை வீட்டின் மாதிரி கோயில்களில் நான்காம் நாளாக பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
இந்து முன்னணி சார்பில் ஜூன் 22-ஆம் தேதி மதுரை வண்டியூர் டோல்கேட் அருகே உள்ள அம்மா திடலில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இதில் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து அரசியல் தலைவர்கள், ஆன்மிகவாதிகள், ஆதீனங்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
மாநாட்டுக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வரும் நிலையில், மாநாட்டு திடலில் அறுபடை முருகன் கோயில்களின் மாதிரி கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
தனி சன்னதிகளில் வேல்களுடன், அறுபடை வீடுகளின் மூலவர்கள் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ள நிலையில், 4வது நாளாக பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.