ஈரான் பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் நடத்திய தாக்குதலில் இஸ்ரேலின் டெல்அவிவ் நகரில் உள்ள சொரோகா மருத்துவமனை கடுமையாக சேதமடைந்துள்ளது.
ஈரான் – இஸ்ரேல் இடையேயான போர் 7வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த தாக்குதலில் இரு நாடுகளிலும் உயிரிழப்புகளும், சேதங்களும் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில் இஸ்ரேலின் டெல்அவிவ், ஹைபா உள்ளிட்ட முக்கிய நகரங்கள் மீது ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதற்கிடையில் டெல்அவிவ் நகரில் உள்ள சொரோகா மருத்துவமனையின் மீது ஈரான் பாலிஸ்டிக் ஏவுகணையை கொண்டு தாக்குதல் நடத்தி உள்ளது. இதனால் மருத்துவமனையில் இருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
ஏவுகணை தாக்குதலால் மருத்துவமனை முழுவதும் கடும் சேதம் ஏற்பட்டுள்ளதால் அங்கிருந்தவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.