ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியை கொல்வதே போரின் இலக்கு என இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ் தெரிவித்துள்ளார்.
ஈரான் மீதான தாக்குதலை கடந்த வாரம் தொடங்கிய இஸ்ரேல், ஆட்சி மாற்றமே இலக்கு எனக் கூறியிருந்தது. இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கையால் ஈரானியர்கள் சுதந்திரம் பெறுவதற்கான வழி ஏற்படும் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ஈரானின் ஆட்சியாளர் அயதுல்லா கமேனியை கொல்வதே இந்த போரின் இலக்கு என்று இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் காட்ஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், கமேனி போன்ற சர்வாதிகாரிகள் ஈரான் போன்ற நாட்டை வழிநடத்தும்போது, இஸ்ரேலை அழித்து விடுவார்கள் என்று கூறியுள்ளார்.
தங்களை அழிக்க நினைக்கும் கமேனி வாழ்க்கூடாது என்றும், அவரை தடுத்து நிறுத்துவதும், கொல்வதும்தான் போரின் முக்கிய இலக்கு என்றும் தெரிவித்துள்ளார்.