நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் தடை செய்யப்பட்ட கிளஸ்டர் குண்டுகளை கொண்டு ஈரான் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் குற்றம்சாட்டியுள்ளது.
அதிக எண்ணிக்கையிலான சிறிய குண்டுகளை ஒரு குறிப்பிட்ட இடத்தில் போட்டு, அவை சிதறி வெடிக்கும்படி செய்ய கிளஸ்டர் குண்டுகள் பயன்படுகின்றன. பெரும்பாலான குண்டுகள் உடனடியாக வெடிக்காமல் மண்ணில் புதையுண்ட நிலையில் இருக்கும். அவற்றை அகற்ற முயலும்போதோ அல்லது தவறுதலா மிதிக்கும்போதோ அவை வெடித்து சிதறும்.
பொதுமக்களுக்கு மிகவும் அச்சுறுத்தலாக விளங்கும் இந்த கிளஸ்டர் குண்டுகளை 100க்கும் மேற்பட்ட நாடுகள் தடை செய்துள்ளன. இத்தகைய ஆபத்தான குண்டை இஸ்ரேலில் உள்ள அசோர் என்ற பகுதியில் போட்டு ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது.
அவற்றில் சுமார் 20 குண்டுகளை கண்டுபிடித்து அப்புறப்படுத்தியுள்ளதாகவும், மற்றவற்றை தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் இஸ்ரேல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.