தொடரும் விபத்துகளால் அதிர்ச்சி : ஆமை வேகத்தில் மழைநீர் வடிகால் பணி!
Aug 12, 2025, 12:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தொடரும் விபத்துகளால் அதிர்ச்சி : ஆமை வேகத்தில் மழைநீர் வடிகால் பணி!

Web Desk by Web Desk
Jun 20, 2025, 08:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை வடபழனி 100 அடி பிரதான சாலையில் மழைநீர் வடிகால் பணி ஆமை வேகத்தில் நடைபெறுவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் ஆபத்தான முறையில்  பயணிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

சென்னை வடபழனி 100 அடி பிரதான சாலையானது தினந்தோறும் ஆயிரக் கணக்கான வாகனங்கள், பொதுமக்கள் செல்லக்கூடிய முக்கிய பிரதான சாலையாகத் திகழ்கிறது. இங்குதான் மழைநீர் வடிகால் பணி ஆமை வேகத்தில் நடைபெறுவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

அசோக் நகர் முதல் கோயம்பேடு வரை செல்லக்கூடிய சாலையாக வடபழனி 100 அடி பிரதான  சாலை திகழ்கிறது. இந்நிலையில் சாலையின் இருபுறமும் மழைநீர் வடிகால் பணிகள் தொடங்கப்பட்டன. அதில் வடபழனியில் இருந்து அரும்பாக்கம் செல்லக்கூடிய 100 அடி பிரதான சாலையில் 1.7 கிலோமீட்டருக்கு மழைநீர் வடிகால் அமைக்க 11 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுக் கடந்த  2023ம் ஆண்டு பணிகள் துவங்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. அந்த வகையில் வடபழனி 100 அடி சாலை முதல் அரும்பாக்கம் வரை மழை நீர் வடிகால் பணிகள் அமைப்பதற்காகப் பள்ளங்கள் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன.  ஆனால் சுமார் 250 மீட்டர் தூரம் வரை  பணிகள் முழுமையாக முடிக்கப்படாமல் பாதியிலேயே விடப்பட்டுள்ளன.

மழைநீர் வடிகால் பகுதி அமைக்கப்படும் இடத்தில்  குடிநீர் குழாய் செல்வதால்  பணிகளை மேற்கொள்ள  முடியவில்லை எனக் கூறி  கடந்த ஜனவரி மாதம் பணிகளை நிறுத்தி உள்ளனர். மேலும் குடிநீர் வாரியம் சார்பில் குழாய்களை மாற்றி அமைத்த பின்பே மழை நீர் வடிகால் பணிகளைத் தொடர முடியும் என நெடுஞ்சாலைத் துறையினர் திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. குடிநீர் குழாய்களை  மாற்றி அமைக்காததால் மழைநீர் வடிகால் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இதன் காரணமாக அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் ஆபத்தான முறையில் பயணிக்க வேண்டும் சூழல் ஏற்பட்டுள்ளது.

மழைநீர் வடிகால் பணிகளுக்காகப் பள்ளங்கள் தோண்டும் பொழுது சிக்னல்களின் மின்சார கேபிள்கள் அறுந்து சேதம் அடைந்ததால் அந்த பகுதியில் சிக்னல் என்பது முறையாக வேலை செய்யாமல் இருக்கின்றன. இதன் காரணமாகவும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல கடைகளுக்கு முன்பு மழை நீர் வடிகால் பணிகளுக்காகப் பள்ளங்கள் தோண்டப்பட்டதால் வியாபாரம் குறைந்து வியாபாரிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். மழைநீர் வடிகால் பணிக்காகத் தோண்டப்பட்ட பள்ளங்களில் கழிவு நீர் தேங்கி இருப்பதால் நோய் தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. மழைநீர் வடிகால் பணியை விரைந்து முடிக்கக் கோரி பலமுறை மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

சென்னை வடபழனி 100 அடி பிரதான சாலையில் மழைநீர் வடிகால் பணி ஆமை வேகத்தில் நடைபெறுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு விபத்துகளும் அரங்கேறுகின்றன.  இதனால் அச்சத்தில் உள்ள மக்கள் மழைநீர் வடிகால் பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கின்றனர்.

Tags: மழைநீர் வடிகால் பணிShocked by continuing accidents: Rainwater drainage work at a snail's paceசென்னை வடபழனி 100 அடி பிரதான சாலைசென்னை வடபழனிதொடரும் விபத்து
ShareTweetSendShare
Previous Post

பூச்சிகளின் ஆச்சரியங்கள்!

Next Post

வாழத் தகுதியற்றதா வடசென்னை?

Related News

அசுர பலம் கொண்ட இந்திய விமானப்படை : 1971 போர் முதல் 2025 ஆப்ரேஷன் சிந்தூர் வரை…!

இஸ்ரேலுக்கான ராணுவ உதவியை நிறுத்திய ஜெர்மனி – உள்நாட்டில் வலுக்கும் கண்டனம்!

“அணு ஆயுத மிரட்டலுக்கு ஒருபோதும் அஞ்ச மாட்டோம்” – பாக். மிரட்டலுக்கு இந்தியா பதிலடி!

பூமியை நோக்கி வரும் ஏலியன்கள்? – “நாம் அனைத்திற்கும் தயாராக இருக்க வேண்டும்”!

இந்தியாவின் வளர்ச்சியை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது : பிரதமர் மோடி

Nvidia நிறுவனத்தின் 80% ஊழியர்கள் கோடீஸ்வரர்கள் : எங்க முதலாளி… நல்ல முதலாளி…!

Load More

அண்மைச் செய்திகள்

நீலகிரி : சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கூறி பேனர் வைத்து ஆர்ப்பாட்டம்!

ஆதாரங்களுடன் குற்றச்சாட்டுகளை முன்வைக்க எதிர்க்கட்சியினருக்கு தைரியம் உள்ளதா? : தர்மேந்திர பிரதான் சவால்!

பாஜக ஆட்சியில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக 350 குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது : பிரதமர் மோடி

வெளிமாநில தமிழ் பாடநூல் விநியோகம் நிறுத்தம்!

தூய்மை பணிகளை தனியார்மயமாக்குவதை எதிர்த்து வழக்கு : மாநகராட்சி பதிலளிக்க அவகாசம் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவு!

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 11 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

வெற்றிப்பெற முடியாத விரக்தியில் ராகுல் காந்தி தேர்தல் ஆணையத்தை குற்றம் சாட்டி வருகிறார் : தமிழிசை சௌந்தரராஜன்

தமிழை வளர்க்க திமுக அரசிடம் பணமில்லையா? மனமில்லையா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

ஆபரேஷன் சிந்​தூர் ராணுவ நடவடிக்கை முழு​வதும் ஆச்​சரியங்​கள் நிறைந்தவை : அமெரிக்க பாது​காப்பு நிபுணர்!

தஞ்சாவூர் : கழிவுநீர் கலந்த குடிநீரால் மஞ்சள் காமாலை பாதிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies