இஸ்ரேலின் தாக்குதலை எதிர்கொண்டுள்ள ஈரானுக்கு வட கொரியா ஆதரவு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மத்திய ஆசியாவில் முழுமையான போரின் அபாயத்தை இஸ்ரேல் அதிகரித்து வருவதாகக் கூறப்பட்டுள்ளது.
இஸ்ரேல் மத்திய கிழக்கின் அமைதியைப் பாதித்த புற்றுநோய் எனவும், உலகளாவிய அமைதி மற்றும் பாதுகாப்பை அழிப்பதில் முக்கிய குற்றவாளி என்பதைத் தெளிவாக நிரூபிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.