ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
எம். கரிசல்குளம் கிராமத்தை சேர்ந்த உத்திரவள்ளி என்பவர் கடந்த 18ம் தேதி கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் அதே கிராமத்தைச் சேர்ந்த ஜோதி என்ற பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதால் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது. அதில் உத்திரவள்ளியை விறகு சேகரிப்பதற்காக அழைத்துச் சென்ற ஜோதி அவரை கொலை செய்ததும், உத்திரவள்ளி அணிந்து இருந்த நகைகளைப் பறித்துச் சென்றதும் தெரியவந்தது. பின்னர் ஜோதியைக் கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 4 சவரன் தங்க நகைகளைப் பறிமுதல் செய்தனர்.