பல அடக்குமுறைகள், தடைகளை கடந்து முருக பக்தர்கள் மாநாடு நடைபெறுவதாக இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழ் ஜனம் தொலைக்காட்சிக்கு சிறப்பு பேட்டி அளித்த அவர்,பக்தர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். முருகர் மாநாடு சிக்கல்களுக்கு நீதிமன்றம் நல்ல தீர்ப்பினை வழங்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.
மாநாட்டிற்கு சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து பக்தர்கள் வர உள்ளதாகவும் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறினார்.