ராணிப்பேட்டை மாவட்டம், நந்திமங்கலம் கிராமத்தில் ஆட்சியர் உத்தரவின் பேரில், சுடுகாட்டு பாதையில் 30 ஆண்டுகளாக இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு புதிய பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
அதே பகுதியைச் சேர்ந்த சில நபர்கள் சுடுகாட்டு பாதையில் கட்டடங்கள் கட்டியும், விவசாயம் செய்து வந்த நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் இறந்தவர்களின் உடல்களை வயல்வெளிகள் வழியாக கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டது. இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியரிடம் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
அதனடிப்படையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு புதிய பாதை அமைக்கப்பட்டு வருவதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.