நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக் கோயில் அர்த்த மண்டபத்தில் சிசிடிவி கேமரா பொறுத்த அர்ச்சகர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆகம விதிகளுக்கு முரணாகக் கருவறையில் உள்ள சுவாமியைப் படம் பிடிக்கும் வகையில் சிசிடிவி கேமராக்களை பொறுத்த கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும், பதாகைகள் ஏந்தி கோவிலைச் சுற்றி வந்து கவன ஈர்ப்பு போராட்டத்திலும் பங்கேற்றனர்.