இஸ்ரேல் – ஈரான் இடையேயான போரில் அமைதிக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் என ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் கூறியுள்ளார்.
போரை நிறுத்துவது அந்தந்த நாடுகளின் தலைவிதியை மட்டுமல்ல, ஒட்டுமொத்த எதிர்காலத்தின் தலைவிதியையும் மாற்ற உதவும் என்று அவர் தெரிவித்தார்.
போர் மேலும் அதிகரிக்க அனுமதிக்கக் கூடாது என்று கூறிய அவர், போர் பதற்றத்தை உடனடியாக குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மேலும், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்குள் ஒற்றுமையையும் ஐ.நா. சாசனத்தையும் பின்பற்ற வேண்டும் என்றும் குட்டெரெஸ் அறிவுறுத்தினார்.