ஜம்மு காஷ்மீரில் அமர்நாத் யாத்ரீகர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என உளவுத்துறைக்குத் தகவல் கிடைத்துள்ளதால் கூடுதல் பாதுகாப்பிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இன்னும் சில நாட்களில் பனி லிங்கத்தைத் தரிசிக்க அமர்நாத் யாத்திரை துவங்க உள்ளது. இதில் ஒவ்வொரு நாளும் 30,000க்கும் மேற்பட்ட யாத்ரீகர்கள் வந்து செல்வர்.
இந்த யாத்ரீகர்கள் பல்டால் என்ற பாதையையும், பஹல்காம் வழியையும் பயன்படுத்தி புனித குகையைச் சென்றடைவார்கள்.
இந்த யாத்திரையின் போது லஷ்கர் அல்லது இதன் ஆதரவு படையினர் தாக்குதல் நடத்தத் திட்டம் தீட்டியிருப்பதாக ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இவர்கள் பிர் பஞ்சால் காட்டில் மறைந்து இந்த தாக்குதலை நடத்தலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.