மதுரை அம்மா திடலில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
முருக பக்தர்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் விதத்தில் மதுரை பாண்டிகோவில் அம்மா திடலில் பிரம்மாண்ட மாநாடு இன்று நடைபெறுகிறது.
இந்து முன்னணி சார்பில் நடத்தப்படும் இந்த மாநாட்டில் ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். இதனையடுத்து ஏராளமான பக்தர்கள் மதுரையில் குவிந்து வருகின்றனர்.
இந்நிலையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மதுரை முருக பக்தர்கள் மாநாடு நடைபெறும் இடத்தை நேரில் பார்வையிட்டார். அறுபடை வீடு கோயில்களின் மாதிரியை தரிசித்தார். பின்னர் மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனும் இணைந்து முருகர் பக்தி பாடலை வெளியிட்டார்.