முருக பக்தர்கள் மாநாடு திமுகவிற்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக, மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
மாநாட்டு திடலை பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது முருக பக்தர்கள் மாநாட்டிற்கு திமுகவால் பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டதாக தெரிவித்தார். –
மாநாட்டை தடை செய்ய காவல்துறை தொடர்ந்து முயன்று வந்ததாகவும் முருக பக்தர்கள் மாநாடு தமிழகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் எல்.முருகன் கூறினார்.