முருக பக்தர்கள் மாநாடு தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் பேசிய அவர், தீமைகள் அழிய சூரசம்ஹாரம் நடந்தது போல் தமிழகத்தில் சமூக விரோத தீய நடவடிக்கைகள் ஒழிய முருகன் மாநாடு நடைபெறுகிறது. முருகன் மாநாடு தமிழகத்தில் ஒரு அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் என தெரிவித்தார்.
கோவிலுக்கு சென்றால் மத அடையாளங்களை வைத்தால் அழித்துவிட்டு போஸ் கொடுக்கிறார்கள் இதை வைத்துக் கொள்வதில் உங்களுக்கு என்ன வெட்கம் இதை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
நீங்கள் இந்துக்கள் தானே இந்து மத அடையாளத்தை வைத்துக் கொள்வதில் என்ன வெட்கம். அதை அழித்துவிட்டு தான் நீங்கள் போஸ் கொடுக்க வேண்டும் என்ற சூழ்நிலையில் இருக்கிறார் திருமாவளவன் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இன்னும் பத்து மாதம் கழித்து ஒரு அழகான குழந்தை பிறக்க இருக்கிறது, அந்த குழந்தையின் பெயர் தேசிய ஜனநாயக கூட்டணி. அந்த குழந்தை தான் தமிழகத்தில் முடி சூடப் போவதாகவும் அவர் கூறினார்.