குஜராத் மாநிலத்தில் ஒரே நேரத்தில் 2 ஆயிரத்து 121 பேர் இணைந்து புஜங்காசனாம் செய்து உலக சாதனை படைத்தனர்.
11 வது சர்வதேச யோகா தினத்தை ஒட்டி உலகின் பல்வேறு பகுதிகளிலும் யோகா நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அந்த வகையில், குஜராத் மாநிலம் வாட் நகரில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் அம்மாநில முதலமைச்சர் பூபேந்திர படேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து நிகழ்ச்சியில் ஒரே நேரத்தில் 2 ஆயிரத்து 121 பேர் இணைந்து புஜங்காசனாம் செய்து அசத்தினர். இதனை உலக சாதனையாக அங்கீகரித்து கின்னஸ் நிறுவனம் சான்றிதழ் வழங்கியது.