இஸ்ரேல் – ஈரான் இடையிலான மோதலால் மத்திய கிழக்கு பகுதியில் 9-வது நாளாக போர் பதற்றம் நீடிக்கிறது.
அணு ஆயுத ஒப்பந்தம் தொடர்பாக இஸ்ரேல் – ஈரான் நாடுகள் போரிட்டு வருவதால் மத்திய கிழக்கு பகுதியில் அசாதாரண சூழல் நிலவுகிறது. 9 நாளாக போர் நீடித்து வரும் நிலையில், இஸ்ரேலின் பெய்ட் ஷியான் நகரத்தின் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல் நடத்தியது. இதனால் குடியுருப்பு கட்டிடங்கள் சேதமடைந்தன.
மறுபுறம் ஈரானின் ராணுவ தளவாடங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. மத்திய ஈரான் பகுதியில் ராணுவ மையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த F 14 ரக விமானங்களை இஸ்ரேல் குண்டு வீசி தகர்த்தது.
ஈரானின் இஸ்ஃபஹான் நகரில் அணு சக்தி நிலையத்தை குறிவைத்து இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் அணு சக்தி நிலைய கட்டடங்கள் உருக்குலைந்த நிலையில், அது தொடர்பான வீடியோவை இஸ்ரேல் விமானப்படை வெளியிட்டுள்ளது.