இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 471 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதன்படி இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது போட்டி லீட்சில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதல் இன்னிங்சில் 471 ரன்கள் குவித்து இந்திய அணி ஆல் அவுட் ஆனது. கேப்டன் சுப்மன் கில், ஜெய்ஷ்வால், ரிஷப் பண்ட் ஆகியோர் அசத்தலாக விளையாடி சதம் விளாசினர். பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் குவித்து 262 ரன்கள் பின்தங்கியுள்ளது