மதுரையில் நடைபெற உள்ள முருக பக்தர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சென்னை திருவொற்றியூரில் இருந்து முருக பக்தர்கள் மதுரை சென்றனர்.
மதுரையில் இன்று மாலை நடைபெற உள்ள முருக பக்தர்கள் மாநாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்க உள்ளனர். பிரம்மாண்டமாக நடைபெற உள்ள இந்த மாநாட்டில் கலந்துகொள்ள திருவொற்றியூரில் இருந்து 700 பக்தர்கள் மதுரை சென்றுள்ளனர்.
அவர்கள் அனைவரும் வட சென்னை பாஜக சார்பில் 12 பேருந்துகளில் அனுப்பி வைக்கப்பட்டனர்.