அமெரிக்கா தாக்கினாலும் எங்கள் பணிகளை நிறுத்த மாட்டோம் என ஈரான் அணுசக்தி அமைப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அமெரிக்காவின் தாக்குதல் அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்திற்கு முரணான மிருகத்தனமான செயல் எனவும். தேசிய தொழில்துறையின் வளர்ச்சியை தடுக்கும் முயற்சிகளை oரு போதும் அனுமதிக்க மாட்டோம் எனவும் ஈரான் அணு சக்தி அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும், தேசத்தின் உரிமைகளை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுப்போம் உறுதி பட தெரிவித்துள்ள ஈரான் அணு சக்தி அமைப்பு, சர்வதேச அணுசக்தி அமைப்பின் ஆதரவுடன் அமெரிக்கா தங்கள் மீது தாக்குதலை நடத்தி உள்ளது என குற்றம் சாட்டி உள்ளது.
மேலும் அணுசக்தி ஆய்வை தேசிய பணிகள் என அறிக்கையில் குறிப்பிட்டுள்ள ஈரான் அணுசக்தி அமைப்பு எங்களின் தேசப்பணிகளை நிறுத்தப்போவதில்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.