பெரம்பலூர் அருகே தன் கனவரை கொலை செய்த நபர்களை கைது செய்யக்கோரி பெண் உறவினர்களுடன் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்.
ரஞ்சன்குடி கிராமத்தைச் சேர்ந்த வினோத் என்பவர் காதல் திருமணம் செய்துகொண்டதால் அவரது உறவினர்கள் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் பலத்த காயமடைந்த வினோத்குமார் சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் கொலையாளிகளை கைது செய்யக்கோரி வினோத்குமாரின் மனைவி மற்றும் அவரது உறவினர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சென்னை – திருச்சி நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.