தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் தடுப்பணையால் சாகுபடிக்கான நீர் கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
டெல்டா மாவட்டங்களில் சாகுபடி வசதிக்காகத் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் குடமுருட்டி ஆற்றிற்குச் சீரான அளவில் தண்ணீர் வந்துகொண்டு இருக்கிறது.
இந்த ஆற்றின் குறுக்கே மணல் கொட்டி தடுப்பணை கட்டும் பணிகள் நடைபெறுவதால் தண்ணீர் பெறுவதில் தாமதம் ஏற்படுவதாகவும், அவசரகதியில் அணைக் கட்டும் பணி நடைபெறுவதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.