வார விடுமுறையையொட்டி, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் குவிந்த பக்தர்கள், பல மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாகவும் விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் வார விடுமுறையையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்தும் வந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் சுமார் 5 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை கூட்டம் அலைமோதியதால் குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் கடும் அவதி அடைந்தனர்.