முருக பக்தர்கள் மாநாட்டால் தமிழகத்தில் ஆன்மிக புரட்சி ஏற்படும் என்று இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் பேசியவர்,
முருக பக்தர்கள் மாநாட்டால் தமிழகத்தில் ஆன்மிக புரட்சி ஏற்படும் என்று நம்பிக்கை தெரிவித்தவர், மாநாட்டிற்கு விளம்பரம் தேடித் தந்த சேகர்பாபு, திருமா, வைகோவிற்கு நன்றி கூறினார்.
பல்வேறு இடங்களில் மாநாட்டிற்கு வந்தவர்களை காவல்துறை தடுத்தனர் என்றும் முருகனின் ஆசியால் இந்த மாநாடு பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது என்று காடேஸ்வரா சுப்பிரமணியம் குறிப்பிட்டார்.
முருக பக்தர்கள் மாநாட்டில் கடல் அலையெனப் பக்தர்கள் திரண்டுள்ளனர் என்றும் அனைத்து கட்சியினரையும் சந்தித்து மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுத்தோம் என காடேஸ்வரா சுப்பிரமணியம் குறிப்பிட்டார்.
ஸ்டாலினுக்கு அழைப்பிதழ் கொடுக்க நேரம் கேட்டும் நேரம் ஒதுக்கவில்லை என்று குறிப்பிட்டவர், முருக பக்தர்கள் மாநாடு தமிழ்நாட்டில் ஆன்மிக புரட்சியை ஏற்படுத்தும் என்று காடேஸ்வரா சுப்பிரமணியம் திட்டவட்டமாக கூறினார்.
நாங்கள் நடத்தும் மாநாட்டிற்கு கணக்குக் காட்ட தயார் என்றும் கோவில் கும்பாபிஷேகத்திற்கு வரும் பணம் எந்த தொழிலதிபர்களிடமிருந்து பெற்றது? என்றும் அதில் எவ்வளவு ஊழல் நடந்தது என வெளியிட அமைச்சர் சேகர்பாபு தயாரா? என காடேஸ்வரா சுப்பிரமணியம் கேள்வி எழுப்பினார்.