தொடர்ந்து இந்துக்கள் வாழ்வியலுக்குப் பிரச்சினை வந்தால் சூரசம்ஹாரம் நடக்கும் என்று பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை எச்சரிக்கை விடுத்துள்ளார்.
முருக பக்தர்கள் மாநாட்டில் பேசியவர்,
வெறும் இரண்டு விழுக்காடு இருக்கும் ஒரு நாடு போர் நடத்துகிறது என்றும் இந்தியாவில் ஆபரேஷன் நடத்தினால் சிலருக்குப் பிடிக்கவில்லை என அண்ணாமலை குறிப்பிட்டார். நாம் ஒற்றுமையை இருந்தால் சிலருக்குப் பிரச்சனை என்றும் தொடர்ந்து நமது வாழ்வியலுக்குப் பிரச்சினை வருகிறது. என்றும் என்னுடைய வாழ்வியல் முறைக்கும் பிரச்சினை வந்தால் நான் திருப்பி அடிப்பேன் என உறுதிபட கூறினார்.
இந்து மக்களிடம் எப்போதும் ஒற்றுமை வராது என்று அரசியல்வாதிகள் அரசியல் நடத்துகிறார்கள் என்றும் இவற்றை அனைத்தையும் மாற்றத் தான் இந்த மாநாடு என அண்ணாமலை கூறினார்.
இந்த மாநாடு ஒரு எச்சரிக்கை மணி என்றும் இந்துக்கள் ஒற்றுமை இருக்க வேண்டும் என அண்ணாமலை தெரிவித்தார். ஆளும் ஆட்சியர்கள் முருகன் பக்தர்களை எந்த வீட்டில் வைத்துப் பார்க்க விரும்புகிறார்கள் என்றும் தொடர்ந்து இந்துக்கள் வாழ்வியலுக்குப் பிரச்சினை வந்தால் சூரசம்ஹாரம் நடக்கும் என அண்ணாமலை எச்சரிக்கை விடுத்தார்.