முருகனைப் பற்றி கேள்வி கேட்கும் நீங்கள் பிற மதங்களைப் பற்றிப் பேசுவீர்களா? என ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக மதுரை அம்மா திடலில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில் பேசியவர்,
உலகின் முதல் புரட்சித் தலைவர் முருகப்பெருமான் என்றும் அநீதியை அழித்ததால், சமமாக நடத்தியதால் முருகன் புரட்சித் தலைவர் என்று பவன் கல்யாண் கூறினார்.
ஒருவர் இந்துவாக இருந்துவிட்டால் அவரை மதவாதி என்று கூறுகின்றனர் என்று கூறியவர், முருகனைப் பற்றி கேள்வி கேட்கும் நீங்கள் பிற மதங்களைப் பற்றி பேசுவீர்களா? என்று அவர் கேள்வி எழுப்பினார்.
அநீதியைத் தட்டிக்கேட்க, அறத்தைக் காக்க முருகப்படை ஒன்று திரளும் என்றும் மதச்சார்பின்மை என்ற பெயரில் இந்துக் கடவுள்களை அவமதிக்கின்றனர் என்று அவர் குற்றம்சாட்டினார்.
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் முருகனின் அவதாரம் என்றும் பொறுமை என்பது கோழைத்தனம் அல்ல என பவன் கல்யாண் தெரிவித்தார்.