ஆப்ரேஷன் சிந்து நடவடிக்கை மூலம் ஈரானில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்டு நாடு திரும்பிய இஸ்லாமியர்கள் பிரதமர் மோடிக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளனர்.
ஈரான் – இஸ்ரேல் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஈரானில் உள்ள இந்தியர்களைப் பாதுகாப்பாக அழைத்து வர ஆப்ரேஷன் சிந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக ஈரானிலிருந்து 285 இந்தியர்கள் டெல்லி வந்தடைந்தனர். அவர்களுடன் சேர்த்து இதுவரை ஆயிரத்து 713 பேர் ஈரானின் இருந்து பாதுகாப்பாக இந்தியா திரும்பியுள்ளனர்.
மறுபுறம், இஸ்ரேலிலிருந்தும் 162 இந்தியர்கள் நாடு திரும்பியுள்ளனர். இந்நிலையில், ஈரானிலிருந்து டெல்லி வந்த இஸ்லாமியர்கள் தங்களைப் பாதுகாப்பாக அழைத்து வந்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தனர்.
நாட்டு மக்கள் அனைவரையும் பிரதமர் மோடி குடும்ப உறுப்பினர்கள் போல் பாவித்து வருவதாகவும் புகழாரம் சூட்டினர்.